Showing 151094 results

Archival description
அச்சு முன்காட்சி View:

வெலிக்கடை தமிழ்க் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டமும்

இக்கோப்பு 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது வெலிக்கடைச் சிறையுள் ஒரு பெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திட்டமிடுவது தொடர்பாக மாவை சேனாதிராஜா மற்றும் காசி ஆனந்தன் அவர்களால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட இரு கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், வெலிக்கடைத் தமிழ்க் கைதிகள் தொடர்பாகவும் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான சுருக்க ஊடக வெளியீட்டு வரைவு [?] ஒன்றினையும் கொண்டுள்ளது.

[வீதி நீட்டிப்பு/ சீரமைப்பு/ அபிவிருத்தி]

இக்கோப்பு மாதகல் - கீரிமலை புதிய வீதி, மாதகல் காஞ்சிபுரம் வீதி, உடுப்பிட்டி ஊரிக்காடு வழி கெருடாவில் வீதி சீரமைப்புகள் போன்றன தொடர்பாக நீர்ப்பாசன, மின்சார, நெடுஞ்சாலைகள் அமைச்சர், கே. வீரவாகு, வி. சிவானந்த ஐயர் & எஸ். கணேசமூர்த்தி ஆகியோரால் செல்வநாயகம் அவர்களுக்கு எழுதப்பட்ட 3 கடிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், சிறீ வல்லிபுரம் வீதி நீட்டிப்பு, சீரமைப்பு மற்றும் தெல்லிப்பழை கிழக்கிலுள்ள தலமன் கலட்டி ஒழுங்கை வடிகால் அமைப்பு சீரமைப்பு போன்றன தொடர்பாக பலாலி தெற்கு மற்றும் தெல்லிப்பழை தெற்கு குடியிருப்பாளர்களால் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு [செல்வநாயகம் அவர்கள் பிரதி பெறுநராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்] எழுதப்பட்ட இரு கடிதங்களையும் கொண்டுள்ளது.

முடிவுகள் 51 இலிருந்து 100 இன் 151094 வரை